Wednesday, January 16, 2019

வசன கவிதை - 85





குறளின் குரல்


குறள் என்றும்
தமிழின் முகவரி.
உலகம் அறிந்த
தமிழின் முதல் வரி.
.
அறம், பொருள், இன்பம்
என்னும் முக்கடலில்
வாழ்க்கைத் தோணியை
செலுத்தி முடித்தால்
வீட்டை ஏகலாம்.
தவிர்க்க வேண்டியவற்றில் விலகவும்,
நாட வேண்டியவற்றில் விளங்கவும்,
வழிகாட்டும் குறள்.
அந்தகார இருளில் தவிக்கும் மானிடத்திற்கு
ஒளிவிளக்காய் விழி காட்டும் குறள்.

133 அதிகாரமும்
கடையில் விற்க அல்ல;
கடைபிடிக்க.