Thursday, January 14, 2010

மரபுக் கவிதை - 66


சூரிய தேவர்

வருகிறார், வருகிறார், வருகிறார் - இறைவன்
சூரியன் உருவிலே வருகிறார்!
(வருகிறார்!)
ஏழு குதிரை பூட்டியுள்ள
தாமரை ரதத்திலேறி
ஆயிரங் கதிர்கள் வீசி
ஆதித்தர் வருகிறார்! வருகிறார்!
(வருகிறார்!)
காலனுக்குத் தந்தையான
கணங்களுக்கு அதிபரான
காந்தியுள்ள அன்பு மிக்க
கதிரவர் வருகிறார்! வருகிறார்!
(வருகிறார்!)
ஞாலத்தின் தலைவராக
காலத்தின் மூர்த்தியாக
கொடியோரைக் கொன்றிடவே
கோள்வேந்தன் வருகிறார்! வருகிறார்!
(வருகிறார்!)
வாழ்வினையே அளிப்பவராய்
நன்றியின்மை அழிப்பவராய்
பசுமைநிறக் குதிரையேறி
பகலவன் வருகிறார்! வருகிறார்!
(வருகிறார்!)
வணங்குவோம், வணங்குவோம் ரவியினை- தீமை
ஒழியுமே, அழியுமே வாழ்வினில்!

நன்றி: விஜயபாரதம் (15.01.1999)
..


No comments:

Post a Comment