Friday, January 1, 2010

வசன கவிதை - 36


இரண்டும் உடையவன்

வாழ்த்துவதற்கும்
வயது வேண்டும்.
வரவேற்பதற்கும்
பண்பாடு வேண்டும்.
இரண்டும் உடையவன்
நான்.

எனது முன்னோர்
வாழ்வினில் முத்துக் குளித்து
கவிதைகளாய்
வேதங்களைப்
பொழிந்தவர்கள்.

எனது பித்ருக்களில் ஒருவரான
கண்ணனின் கீதைக்கு
வயது
5000ஐ
தாண்டிவிட்டது.

வாடி வதங்கி வந்த
யூதர்களுக்கும்
பார்சிகளுக்கும்
அமுதூட்டி
அரவணைத்தவர்கள்
என் அன்னையர்கள்.

குறுமுனி அகத்தியரும்
குறட்பா வள்ளுவரும்
வாழ்ந்த காலம் -
பிறக்கப் போகும்
2000ஐ விட
அதிகம்.

கௌதம புத்தனையும்
கரிகால் சோழனையும்
அளவிடத் தகுந்த
காலக் கணக்கீடு
என்னிடம் மட்டுமே உண்டு.

எனது கோத்திரத்தின்
துவக்கம்
என்று தோன்றியதென்று
அறியப்படாத
பழமை மிக்கது.

எதையும்
வாழ்த்துவதற்கும்
வரவேற்பதற்குமான
தகுதி
எனக்கு மட்டுமே
இருக்கிறது.

ஏ!
இரண்டாயிரம் முடிந்து
மூவாயிரத்திற்குள்
கால் வைக்கும்
'ரோம'க் காலண்டரே!
உனக்கு ஒரு வாழ்த்து!

உனக்கு நல்வரவேற்பு!
ஆனால்
சற்றே அடக்கமாக இரு!

நான்
2000
பலமுறை கடந்தவன்.
நன்றி: விஜயபாரதம் (31.12.1999.)
குறிப்பு: 'மில்லெனியம் ஆண்டு' என்று கூறிக்கொண்டு, 2000ஆண்டின் முடிவில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு உருவாக்கப்பட்டது. அப்போது வெளியான கவிதை இது.
.

1 comment:

lcnathan said...

mika nalla pathivu, nantri!!

Post a Comment