Monday, January 4, 2010

உருவக கவிதை - 19



குடில்

கண்ணுக்குப் புலப்படாத
மசமசக்கும் இருளினூடே
அதோ தெரிகிறது குடில்.
எங்கோ ஒலிக்கும்
நரியின் ஊளை உளறல்
செவிக்கு எட்டாமல்.
நாசியில் நுழைய மறுக்கும்
வெட்டியான் எரித்த
பிணத்தின் புகை.
குருதியின் உவர்ப்பை
உணர மறுக்கும்
பற்கடி பட்ட நாக்கு.
ஆயினும் இயங்குகிறது
கண்ணியற்ற இரவிலும்
கனாக் கண்ட தேகம்.

கண்ணுக்குப் புலப்படாத
மசமசக்கும் இருளினூடே
அதோ தெரிகிறது குடில்.

(எழுதிய நாள்: 17.02.1999)
.

No comments:

Post a Comment