Monday, January 4, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்


... மாலை ஆறு மணி சமயம். குசேலர் வீட்டு முன் வாசல். தெருக்கோடியில் நிற்கும் மின்சார விளக்கு தன் திறமையை எல்லாம் வைத்துக்கொண்டு குசேலர் வீட்டு வாசலில் வெளிச்சம் போடப் பார்க்கிறது. எங்கோ ஒருவன் 'மலாய்வாலா' என்று கத்திக்கொண்டு போகிறான். கிருஷ்ணன் கோயில் வாத்திய கோஷம். பவழக்காரத் தெருவில் தலை தெறிக்க ஓடும் மோட்டார் ஹார்ன். கதம்பக்காரன், வெற்றிலைக்காரன் குரல்கள் தம்மில் மாறுபட்டுக் குழம்புகின்றன. வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, திடீர் திடீரென்று மன உலகத்தில் சுடர்விடும் உண்மைகள் போல வெளிவரும் நட்சத்திரங்கள்...
-புதுமைப்பித்தன்
(பக்த குசேலா நாடகத்தில்; புதுமைப்பித்தன் நாடகங்கள்- பக்:119)

.

No comments:

Post a Comment