Friday, January 8, 2010

வசன கவிதை - 38


விதி - 2

போக்குவரத்து விதியல்ல
மீறிவிட்டு தண்டனை பெற.
இது மீறவே முடியாத விதி.

சில சமயம்
மீறிவிட்டதுபோல்
தோன்றும்.
ஆனால் அதுவும் விதி.

நேற்று
இன்று
நாளை என
எப்பொழுது
காலம் பிறந்ததோ
அப்பொழுதே பிறந்துவிட்டது
விதி.

விதியை மீற
நினைப்பது கூட
உனது விதி.

ஆனால்-
கவலைப்படத் தேவையில்லை.
பாதையைப் பார்த்து நட -
நடப்பது நடந்தே தீரும்.
நடக்கட்டும்.
நீ நட.

இது உன் விதி.

எழுதிய நாள்: 26.08.1989
.

No comments:

Post a Comment