Thursday, June 21, 2012

எண்ணங்கள்

கோவை பதிவர்கள் சந்திப்பில் நான்


கோவை பதிவர்கள் குழு படத்தில் நானும்  (கண்டுபிடியுங்கள்)

கடந்த ஜூன் 10 ம் தேதி  கோவையில் (ஓரியன் ஓட்டல், கிராஸ் கட் சாலை) நடந்த 'கோவை பதிவர்கள்' சந்திப்பில் கடைசி நேரத்தில் சென்று கலந்துகொண்டேன். நண்பர்கள் சங்கவி, சம்பத், ஜீவா, சுரேஷ், கோவை சக்தி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 40 க்கு மேற்பட்ட பதிவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஒரு பதிவர் என்ற முறையில் நானும் பங்கேற்றது  மகிழ்ச்சி.


நிகழ்ச்சியில் நான் பேசியபோது...

''எந்த ஒரு மரமும் ஒரு சிறு விதைக்குள் தான் உறங்குகிறது. மாபெரும் மரம் ஒரு சிறு விதையில் இருந்து தான் துவங்குகிறது. அதுபோல நமது கோவை பதிவர்கள் அமைப்பும் இன்று சிறு சந்திப்பாகத் துவங்கி உள்ளது. நாமும் மாநில அளவில் அனைவருக்கும் வழிகாட்டக் கூடிய விதமாக வளர்வோம்; இணையத்தை வெட்டி அரட்டைக்கான மேடையாக்காமல் நாம் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவோம்'' என்று இக்கூட்டத்தில் நான் பேசினேன்.

கூட்டத்தில் பங்கேற்ற இதர நண்பர்களுக்கும், கூட்டத்தை நடத்திய நண்பர்களுக்கும் நன்றி.

காண்க:

கோவை பதிவர்கள் சந்திப்பு குறித்த அறிவிப்பு.
கோவை பதிவர்கள் சந்திப்பு - பகுதி 1
கோவை பதிவர்கள் சந்திப்பு - பகுதி 2

1 comment:

கலாகுமரன் said...

நல்ல சிந்தனை துளிகள் தந்த திரு.முரளி அவர்களுக்கு நன்றி.

Post a Comment