Sunday, October 7, 2012

புதுக்கவிதை - 148




கருவாடு

 





ஒரு கவிதை
நிராகரிக்கப்பட்டுவிட்டது-
படிக்கப்படாமலேயே-
வாழாமலே முடிந்துபோன
வாழ்க்கை போல.

அந்தக் கவிதையின்
ஒவ்வொரு வரியிலும்
துடிப்பு இருந்தது-
நிலத்திலும் வாழத் துடிக்கும்
மீன் போல.

காய்ந்த மீன் கூட
கருவாடாகும்-
இந்தப் புலம்பல் போல.
.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சிந்தனை வரிகள்... அருமை...

Post a Comment