Thursday, June 26, 2014

பசுமை நிறைந்த நினைவுகள்.. பாடிப் பறந்த பறவைகள்...


நாச்சிமுத்து பாலிடெக்னிக் - பிரதான கட்டடம்

25 ஆண்டுகள் என்பது மானுட வாழ்வில் பெரும்பகுதி. அப்படிப்பட்ட 25 ஆண்டுகளைக் கடந்து, முன்னர் தன்னுடன் பயின்ற நண்பர்களைக் காண்பது ஒரு பேறு.

1986- 89-இல் பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நான் பட்டயப்படிப்பு (DME) படித்தேன். அப்போது என்னுடன் படித்த சக மாணவ நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தால் (NAPAA) வாய்த்தது.

கடந்த 15.06.2014, ஞாயிற்றுக்கிழமை, நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கத்தில் இந்தக் கூடுதல் நடைபெற்றது. அங்கு பயின்று பொன்விழா காணும் முன்னாள் மாணவர்களும் (1964 பேட்ச்) வெள்ளிவிழா காணும் முன்னாள் மாணவர்களும் (1989 பேட்ச்) அதில் சந்தித்து மலரும் நினைவுகளுடன் கட்டியணைத்துக் கொண்டோம்.

நாங்கள் படித்தபோது பாலிடெக்னிக் வளாகத்தில் மரங்கள் தான் அதிகம்;  காடுபோலக் காட்சி அளிக்கும். இப்போது எல்லா இடங்களிலும் கட்டடங்கள். டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியும் அதே வளாகத்தில் இயங்குவதால், கல்வி நிறுவன வளாகமே முற்றிலும் தோற்றம் மாறி இருந்தது.

பாலிடெக்னிக் வளாகம் மட்டுமல்ல, நாங்களும் தான். 25 ஆண்டுகள் அல்லவா? பலரும் இளமைப் பருவத்தைக் கடந்த அனுபவ நிலையை தோற்றத்தில் காட்டினோம். ஆயினும், ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு, பெயரை மறக்காமல் அழைத்து, நலம் விசாரித்து, குதூகலித்தோம்.


நாங்கள் கல்லூரியிலிருந்து பிரிந்தபோது எங்கள் வயது 18 ஆக இருந்தது. இப்போது மீண்டும் சந்திக்கும் போது, வாழ்வின் முக்கியமான வளர்ச்சிக்கட்டத்தில் பெரும்பகுதியைக் கடந்து 43 வயதில் இருக்கிறோம்.

மூன்று ஆண்டுகள் ஒன்றாக கல்வி வளாகத்தில் திரிந்த நாட்கள்... ஒருவருடன் ஒருவர் முரண்பட்டு ஊடிய நாட்கள்... கொண்டாட்டமாகக் கழிந்த, இனி வரவே இயலாத இனிய நாட்கள்... எல்லோரும் நினைவுகளில் மூழ்கித் தத்தளித்தோம்.

நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்புறமுள்ள கல்தேர் (கல்வி நிறுவன சின்னம்)


சிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர்; சிலர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருந்தனர்; சிலர் துறை மாறி வேறு துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தனர். சிலர் வெளிநாட்டிலிருந்தும் வந்திருந்தனர். வயதின் முதிர்ச்சியும் அனுபவத் தெளிவும் பலரிடமும் வெளிப்பட்டது. ஆனாலும், படித்தபோது இருந்த அதே உரிமை உணர்வுடன் அனைவரும் ‘டா’ போட்டுப் பேசிக் கொண்டோம்.

இவ்வாறு பேசிக்கொள்ள நண்பர்களை விட்டால் வேறு ஆளில்லை. எங்கள் யாரிடமும் படாடோபம் இல்லை;  கடந்த 25 ஆண்டுகளில் பல இடங்களில் பயணித்திருந்தாலும், இத்தகைய சகோதரத்துவ உணர்வுடன் கூடிய நட்புறவை, பாலிடெக்னிக்கிற்குப் பிந்தைய காலத்தில் எங்கும் பெற முடியவில்லை என்பது சட்டென உறைத்தது.

ஒவ்வொருவரும் தங்களை மேடையில் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, அவர்களின் வளர்ச்சி கண்டு ஒவ்வொருவரும் பெருமிதம் கொண்டோம். மொத்தத்தில் நாங்கள் அனைவரும் எங்களை நாங்களே அன்று புதுப்பித்துக் கொண்டோம்.

இதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்தவர், சக மாணவரும், இபோது கோவையில் சிறுதொழிற்கூடம் நடத்துபவரும், கோவை  ‘காட்மா’ பொருளாளருமான ஜே.மகேஸ்வரன். அவர்தான் கடந்த 2 மாதங்களாக பெரும் பாடுபட்டு 100-க்கு மேற்பட்ட முகவரிகளைச் சேகரித்து, அனைவரையும் ஒரே நாளில் சந்திக்க ஏற்பாடு செய்தவர்.

பலவகைகளில் முயன்றும் ஐந்து துறைகளிலிருந்து 300 பேர் வர வேண்டிய நிகழ்ச்சிக்கு நூற்றுக்கு மேற்பட்டோரே வந்திருந்தனர். பலர் உலகின் பல மூலைகளில் இருப்பதால், வர இயலவில்லை. அதிலும் இயந்திரவியல் (DME) பிரிவில் சுமார் 60 பேர் மட்டுமே வந்திருந்தனர்.  வந்தவர்களிலும் பலர் குழுக் குழுவாகப் பிரிந்ததால் புகைப்படம் எடுக்கும்போது பலர் விடுபட்டனர்.

இத்தகைய சந்திப்பை அரை நாளில் நடத்திவிட முடியாது என்பது உணரப்பட்டது. இனி ஆண்டுதோறும் ஒருநாளில் நண்பர்கள் ஏதாவது ஒரு இடத்தில் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இப்போதைக்கு அன்று நிகழ்ந்த சந்திப்பின் இரு புகைப்படங்கள் இங்கே... மலரும் நினைவுகள் தொடர்கின்றன...

படம் 1

படம் 2


மேற்படி படங்களில் இருப்போர் விவரம்:


முதல் படம்:

மேல் வரிசையில் நிற்பவர்கள்:
  • 1. பாலசந்தர்
  • 2. உமர் ஃபாரூக்
  • 3 கே.செல்வகுமார் (எம்மேகவுண்டம்பாளையம்)
  • 4. அருணகிரி
  • 5. வ.மு.முரளி (நான்)
  • 6. ரவிகுமார்
  • 7. எம்.செல்வகுமார் (அய்யம்பாளையம்)
  • 8. செந்தில்குமார் (கணபதி)
  • 9. ஆர்.பி.செந்தில்
  • 10. பழனிசாமி
  • 11. சக்திவேல்
  • 12. காளிராஜ்
கீழ்வரிசையில் நிற்போர்:
  • 1. ரகுநாத்
  • 2. ஞானமுருகேசன்
அமர்ந்திருப்போர்:
  • 1. ஜே.மகேஸ்வரன்
  • 2. லட்சுமி வெங்கட்ரமணன்
  • 3. ஆனந்தகுமார்
  • 4. கே.சுரேஷ்
  • 5. ராபர்ட்
  • 6. ஏ.சோமசுந்தரம் 

இரண்டாம் படத்தில் இருப்போர்:

நிற்பவர்கள்:
  • 1. சக்திவேல்
  • 2. ஞானமுருகேசன்
  • 3. ஏ.சோமசுந்தரம் 
  • 4. ரகுநாத்
  • 5 செல்வகுமார் (எம்மேகவுண்டம்பாளையம்)
  • 6. எஸ்.தீபன் பிரபு (ஏரிப்பட்டி செல்வகுமாரின் மகன்)
  • 7. அருணகிரி
  • 8. அருண்குமார் பாலாஜி
  • 9. செந்தில் ராஜ்குமார்
  • 10. செந்தில்குமார் (கணபதி)
  • 11. டி.கே.வெங்கடேஷ்
  • 12. ஆனந்தகுமார்
  • 13. மோகன்ராஜ்
  • 14. காளிராஜ்
  • 15. பழனிசாமி
  • 16. ஆர்.பி.செந்தில்
  • 17. பாலசந்தர்
  • 18. வ.மு.முரளி
  • 19. கே.சுரேஷ்
  • 20. வி.செந்தில்குமார் (உடுமலை)
அமர்ந்திருப்போர்:
  • 1. ரவிகுமார்
  • 2. முருகையன்
  • 3. தெய்வசிகாமணி
  • 4. எஸ்.செல்வகுமார் (ஏரிப்பட்டி)
  • 5. உமர் ஃபாரூக்
  • 6. கே.வாசு
  • 7. ராபர்ட்
  • 8. ஜே.மகேஸ்வரன்

குறிப்பு:  
படத்தில் இருக்கும் நண்பர்களைப் பற்றிய விளக்கங்கள் அடுத்த பதிவில் தொடரும்...

 .

1 comment:

Post a Comment