Monday, December 14, 2009

மரபுக் கவிதை - 57


மத்திமன்

காலையில் எழுந்து கடன்களை ஆற்றி
அலுவலகத்துக்கு ஆலாய்ப் பறந்து
மேலதிகாரி முன் நெளிந்து நின்று
துவளா மனத்துடன் சுடுசொல் வாங்கி
கடமையாற்றி, மிகுபணி செய்து
அரை வயிற்றுணவு மதியம் உண்டு
மாதம் முழுவது தட்டுத் தடுமாறி
மாதம் முடிந்த சம்பள நாளில்
கஜவட்டிக்காரனுக்கு காணாமல் ஒளிந்து
பைக்கள்ளர்களுக்கு பயந்து பயந்து
சிறு நடையிட்டு வீட்டை ஏகி
ஒருமுழப் பூச்சரம் முகர்ந்து வாங்கி
மனைவியை நினைத்து மரத்தில் மோதி
விதியை நினைத்து வீக்கம் தடவி
சிறு குழந்தைக்கு மிட்டாய் வாங்கி
வீட்டை ஏகி
மனைவியின் கரத்தில் சம்பளம் தருவது
மத்திமனுக்கு மாதவம் அன்றோ?
.

No comments:

Post a Comment