Thursday, December 24, 2009

வசன கவிதை - 33


விழிப்பு

என்னுடைய பொருளொன்று பறிபோய் விட்டது.
பேருந்தில் செல்கையில் ஜேப்படியாகி விட்டது.

என்ன காரணம்?
என்னுடைய கவனக்குறைவா?
பேருந்தில் இருந்த நெரிசலா?
திருடனின் சாமர்த்தியமா?
என்னுடைய பொருளொன்று பறிபோய் விட்டது.

திருடர்கள் என்னை அணுகக் காரணம் என்ன?
எனது மென்மையான முகமா?
வலுவற்ற உடலா?
ஊருக்குப் புதியவன் என்று ஒட்டியிருக்கிறதா?
பாவம்- வறுமையா?
என்னுடைய பொருள் பறிபோய் விட்டது.

திருட்டு நடந்தது தெரியவே இல்லையே?
நமக்கென்ன என மற்றவர்கள் இருந்துவிட்டார்களா?
வேடிக்கை பார்ப்பதில் என்னை மறந்து விட்டேனா?
நடத்துனருக்கு திருடர்கள் பற்றித் தெரியாதா?
பொருள் பறிபோய் விட்டது.

திருட்டுக் கும்பலில் எத்தனை பேர்?
ஒருவரா?
இருவரா?
ஒரு குழுவா?
'தேமே' என்று நின்றிருந்த நானும் அதில் சேர்த்தியா?
பறிபோய் விட்டது.

தனிமையில் மனம் புலம்புகிறது.
ஐம்பது ஆண்டு ஜனநாயகத்திற்கும்
என்னுடைய இன்றைய நிலைமைக்கும்
எத்தனை ஒற்றுமை?

பறிகொடுத்த பொருளை எண்ணி பெருமூச்சு வருகிறது.
''இனிமேல் விழிப்பாக இருக்க வேண்டும்''
மனம் தீர்மானிக்கிறது.

எழுதிய நாள்: 26.09.1998
(குறிப்பு: அனுபவம் பேசுகிறது)
.

No comments:

Post a Comment