Wednesday, December 30, 2009

மரபுக் கவிதை - 60


நல்ல காலம் பிறக்குது!


நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது!

வல்லமை வளருது! வல்லமை வளருது!
அல்லவை அழியுது! அறமே பெருகுது!
நல்லவர் வாழ்ந்திட நவநிதி வளருது!
நல்ல காலம் பிறக்குது!
சொல்லடி ஜக்கம்மா, விண்ணவர் ஈஸ்வரி!
அம்மையே, நாயகி, வேதகி, வித்தகி!

வேஷங் கிழியுது! வேதனை மடியுது!
நாசங்கள் நலியுது! நன்மையே பெருகுது!
தேசங்கள் இணையுது! நேசங்கள் பரவுது!
நல்ல காலம் பிறக்குது!
சொல்லடி மாகாளி, சிவசக்தி, சூலினி!
பார்வதி, சங்கரி, வேதகி, லட்சுமி!

ஒற்றுமை வளருது! உலகம் சிறக்குது!
கற்றவர் பெருகிட கயமைகள் கழியுது!
வெற்றி மேல் வெற்றியே! வேதியம் மலருது!
நல்ல காலம் பிறக்குது!
சொல்லடி மீனாட்சி, காமாட்சி, கண்ணகி!
மாரியே, மங்களி, வேதகி, வைணவி!

இல்லறம் உயர்ந்திடும்! இன்பமே பெருகுது!
நீசர்கள் நடுங்கிட நீதி நிலைக்குது!
உற்றுணையாக ஓர் உதயம் நிகழுது!
நல்ல காலம் பிறக்குது!
சொல்லடி ஜக்கம்மா, பார்வதி, சங்கரி!
அம்மையே, அம்பிகே, ஆதகி, வேதகி!

நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது!
எழுதிய நாள்: 01.03.1991

.

No comments:

Post a Comment