Friday, December 11, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


எழுத்துக்கும்
வாழ்க்கைக்கும் மத்தியில்
சுவர் எழுப்பிக் கொள்ளாத
சுத்தக் கவிஞன் அவன்.

அந்த ராஜகுயில்
தனது சுதந்திர கீதம்
சுவரில் மோதி
இறந்துவிடுவதை
என்றும் விரும்பவில்லை.

அது காற்றில் கலந்து
மக்கள்
காதில் கலக்கவே
காதல் கொண்டது.

தனது சுதந்திர அவஸ்தைகளை
ஒவ்வோர் நெஞ்சிலும்
பரிமாறத் தானே
பாட்டெழுதினான்?...

அவன் எழுப்பிய போதுதானே
நம்மவர் பலர்
உறங்கிவிட்டதை
உணர்ந்தார்கள்?...
-கவிஞர் வைரமுத்து
(கவிராஜன் கதை - பக்: 50 )
(இன்று பாரதி பிறந்த நாள்)
.

No comments:

Post a Comment