Sunday, December 27, 2009

புதுக்கவிதை - 58


யாது யான் செய்ய?

யாராவதொருவன்
இருக்க வேண்டும்
அடக்கியாள.
யாராவதொருவன்
இருக்க வேண்டும்
தனக்குக் கீழே.
யாராவதொருவனை விட
தான் பரவாயில்லை-
மனதில் நிம்மதி.
யாராவதொருவன்
முன்னேறிவிடக் கூடாது
தன்னைவிட.
யாராவதொருவன்
அல்லலுறுவது
அற்ப சந்தோசம்.
இதில்
யாதாவதொன்றாகவே
உலகம் இருக்கிறது.
யாது யான் செய்ய?
.

No comments:

Post a Comment