Thursday, December 24, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


நாமெல்லோரும் திருடர்கள் என்றே சொல்ல வேண்டும். என்னுடைய அவசியத்துக்கு மேல் இந்தச் சமயம் எனக்கு வேண்டாதது ஒன்றை நான் எடுத்து பத்திரப்படுத்தி வைத்தேனானால், அதை நான் திருடியவனே ஆவேன். மற்றவர்களின் அவசியத்துக்கு வேண்டியதான ஒன்றை அவர்களுக்குக் கிடைக்காமல் நான் மூடி வைத்தால் அது திருட்டே அல்லவா? மக்கள் சமூகத்துக்கு வேண்டியதை இயற்கை அன்னை தருகிறாள். அவனவனுக்கு வேண்டியதை அவனவன் அந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொண்டு வாழ்ந்தால் இந்த உலகத்தில் பிச்சை எடுக்கும் ஏழைகள் இருந்தே இருக்க மாட்டார்கள். யாரும் பசியால் சாக மாட்டார்கள்.

-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ- பக்: 39 )

.

No comments:

Post a Comment