Saturday, December 12, 2009

புதுக்கவிதை - 51


அரிதாரமும் அவஸ்தையும்

சாலை கூட
அரிதாரம் பூசிக் கொள்கிறது-
இரு புறமும் செம்மண்ணால்.
கூடவே, வட்ட வட்டமாய்
சுகாதாரப் பொட்டு.

ஆயினும்-
கட்சிக் கொடி நட,
வரவேற்பு விளம்பரம் கட்ட,
தோரண வாயில் அமைக்க,
சாலையின் இருபுறமும்
ஆங்காங்கே நோண்டிய
காயங்கள்.

அமைச்சர் வந்து
போன பின் தான்
அவஸ்தை தெரியும்.
.

No comments:

Post a Comment