Wednesday, December 23, 2009

மரபுக் கவிதை - 59


வெற்றியின் சின்னம்


தோல்விகள் நமக்கு ஏணிகளாகும்
துயரம் நமக்குப் படிப்பினையாகும்;
வெற்றிக் கனியை எட்டும் பொழுதில்
வேதனை எல்லாம் சாதனையாகும்!

ஜி.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட்
சொல்லும் சேதி சாதனை தானே?
இலக்கை நோக்கிப் பயணம் செய்யும்
இளைஞனுக்கு இது போதனை தானே?

எத்தனை முறைகள் விழுந்திடும் பொழுதும்
எழுந்திட முயன்றால் மனிதம் வெல்லும்!
இதனைத் தானே ஸ்ரீ ஹரிகோட்டா
இனிதாய் நமது காதில் சொல்லும்!

இஸ்ரோ குடும்பம் வெற்றியின் சின்னம்;
இனிய நற்பாங்கின் பெருமித வண்ணம்!
இந்தியன் இனிமேல் வானை அளக்கும்
இயல்பைப் பெற்றவன் என்பது திண்ணம்!

நன்றி: விஜயபாரதம் (27.04.2001)
குறிப்பு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, ஜி.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட்டை விண்ணுக்கு 2001, ஏப்ரல் 18 அன்று வெற்றிகரமாக ஏவியதை அடுத்து எழுதிய கவிதை.

.

No comments:

Post a Comment