skip to main |
skip to sidebar
கவியின் கடிதம்'படித்தால் புரியாத
பா எழுதத் தெரியாது.
பாமரனை வியக்க வைக்கும்
படிம உத்தி தெரியாது.
சமுதாயத் தத்துவத்தை
சடங்காக்கத் தெரியாது.
மரபுத் தமிழ் மறந்து
மாரடிக்கத் தெரியாது.
சிக்கல் சிற்ப
சிதறுகவி தெரியாது.
எனக்கெதற்கு
கவிதை மனம்?'
புலம்பும் கவிஞனின்
புதிய முயற்சி
வாசகர் கடிதமாகவாவது
வருமா, கதிரில்?
(தினமணி கதிர்- கவிதைச் சிறப்பிதழுக்கு கவிதை அனுப்பி பிரசுரமாகாத போது எழுதிய புலம்பல் கவிதை இது. நாள்: 08.09.1996. இப்போது இதைக் குறிப்பிட காரணம் இருக்கிறது)..
No comments:
Post a Comment