Tuesday, February 16, 2010

மரபுக் கவிதை - 73


வேண்டுவன - 2

கடவுளின் கருணை கண்டிடல் வேண்டும்
திடம் மிகு வீரம் திளைத்திடல் வேண்டும்
மதங்கள் மனிதனை உயர்த்திடல் வேண்டும்
மதங்களில் வேற்றுமை மறைந்திடல் வேண்டும்
திராவிட மாயை தகர்ந்திடல் வேண்டும்
பாரதநேயம் பிறந்திடல் வேண்டும்
மொழிவெறி உணர்வு ஒழிந்திடல் வேண்டும்
வழிவழி மரபுகள் வளர்ந்திடல் வேண்டும்
தரணியில் அமைதி தவழ்ந்திடல் வேண்டும்
தரம் மிகு ஆட்சி நடைபெறல் வேண்டும்
தெளிவுடன் கொள்கை இயற்றிடல் வேண்டும்
துளிர்த்திடும் ஊழல் துடைத்திட வேண்டும்
ஒற்றுமை உணர்வு ஓங்கிடல் வேண்டும்
பற்றுடன் நாட்டைப் பேணிடல் வேண்டும்
தொழில்கள் அனைத்தும் தொடங்கிடல் வேண்டும்
எழில்மிகு கலைகள் எழுந்திடல் வேண்டும்
ஆலைகள் பலவாய் அமைந்திடல் வேண்டும்
சாலைகள் ஒழுங்குடன் மிளிருதல் வேண்டும்
உண்மைகள் உலகினில் நின்றிடல் வேண்டும்
பண்டைய சிறப்பு பரந்திடல் வேண்டும்
வைதிகம் நாட்டில் வளர்ந்திடல் வேண்டும்
கைத்திறம் நாட்டில் களித்திடல் வேண்டும்
கல்வியில் மக்கள் தேர்ந்திடல் வேண்டும்
வல்லமை நமக்கு வசமாக வேண்டும்
கனவுகள் காண்பது கலைந்திடல் வேண்டும்
நனவுகள் ஆக்கிட விழைந்திடல் வேண்டும்
பீடுடை தெய்வம் நல்கிட வேண்டும்
தேடிடு இவற்றைத் தேர்ந்திடல் வேண்டும்!
.

No comments:

Post a Comment