Tuesday, October 27, 2009

உருவக கவிதை - 11


நெற்றிக்காசு

நெற்றிக்காசு
தெரியுமா?
'பொட்டென போனவுடன்
நெற்றியில் வைக்கும்
வட்டக் காசு.

அறிவும் ஆலயமும்
ஆயிரம் சேர்த்தாலும்
முத்தும் அழகும்
முனைந்து சேர்த்தாலும்
'பொட்டென' போய்விட்டால்
வட்டக்காசே
வழித்துணை.

கோடீஸ்வரனாய் இருந்தாலும்
கோடித் துணி தான்.
இலவச இணைப்பாய்
காலைக் கட்டி,
நெற்றியில்
வட்டக்காசு.
அதுவும்-
வெட்டியானுக்கு.

நெற்றிப்பொட்டின்
மகத்துவம் இதுவே-
'பொட்டென' போகும் முன்
புண்ணியம் செய்.
கட்டையில் போகும் முன்
கருணை காட்டு.

நெற்றிப்பொட்டு
நினைவு படுத்தலே.
'தவறுவதற்கு முன்
தவறுகளைத் திருத்து.
தமாஷாக வாழ்ந்து
தமாஷாகி விடாதே.
காலம் இன்னும் இருக்கிறது'.
நன்றி: விஜயபாரதம்
(12.02.1999)

No comments:

Post a Comment