Wednesday, June 23, 2010

சிந்தனைக்கு


செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து

தமிழ்மொழி வாழ்த்து


தான தனத்தன தான தனத்தன
தான தந்தான

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்து மளந்திடு
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
யிசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!

சூழ்கடல் நீங்கத் தமிழ்மொழி யோங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
-மகாகவி பாரதி

குறிப்பு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அரசியல் நோக்கத்துடன் நடத்தப்படுவது என்றாலும், தாய்மொழியாம் தமிழுக்காக நடத்தப்படும் விழா என்பதால், மகாகவி பாரதியின் அர்த்தமுள்ள வாழ்த்து இங்கு இடம் பெறுகிறது. செம்மொழி மாநாட்டை வாழத்துவதற்கு அவரை விட யாருக்கு தகுதி உள்ளது?
.

No comments:

Post a Comment