Showing posts with label கம்பர். Show all posts
Showing posts with label கம்பர். Show all posts

Wednesday, August 18, 2010

சிந்தனைக்கு




கருவூலம்






வன்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.
-கவிச்சகரவர்த்தி கம்பர்
(கம்ப ராமாயணம்- பாலகாண்டம், நாட்டுப்படலம்- 53)


.


Wednesday, March 24, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்

குகனோடும் ஐவரானோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனுடன் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த
அகன்அமர் காதல் ஐய! நின்னோடும் எழுவர் ஆனோம்;
புகழ்அரும் கானம் தந்து புதல்வரால் பொழிந்தான் உந்தை
-கவியரசர் கம்பர்
(கம்ப ராமாயணம்- யுத்த காண்டம்)

.

Wednesday, December 16, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

அஞ்சிலே ஒன்று பெற்றான்,
அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று பெற்ற
ஆரியர்க்காக ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டயலாரூரில்,
அஞ்சிலே ஒன்றை வைத்தான்,
அவன் நம்மை அளித்துக் காப்பான்.
-கவிச்சக்கரவர்த்தி கம்பர்
(ராமாயணம்)
இன்று அனுமன் ஜெயந்தி
.

Thursday, October 1, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா(து) இடர்.
-கம்பர்
(சரஸ்வதி அந்தாதி).