.
.
.
.
.
புனர் ஜென்மம்
அனல்காற்று வீசும் பாலைப் பெருவெளியின்
கானல் குளங்களின் ஊடே ஒற்றை ஈச்ச மரம்.
கூகைகளும் அஞ்சும் மயான வெயிலில்
முன்ஜென்ம நினைவுகளில் மூழ்கி
கண்கள் செருகுகிறது
வாயுலர்ந்த ஒட்டகம்.
*********
கானகப் பசுமையைச் சிதைத்தபடி
முன்னேறும் கோடரிக் கும்பல்களின்
தோள்களில் காயம் பட்ட மான்கள்.
ரம்பத்தின் பேரோசையில் அமிழ்ந்து போகிறது
குருதி வழியும் மான்களின் ஈனசுரம்.
*********
பாலைவனச்சோலையில் நிழல்தரும்
ஒற்றைமரம் மனிதனாகலாம்-
அடுத்த ஜென்மத்தில் ஒட்டகம் போல.
புண்ணியக் கணக்கை பாவத்தால் சரிக்கட்ட
வேறுவழி?
....
செயற்கை நுண்ணறிவின் அதிவேகப் பாய்ச்சல்!
-
-மனீஷ் திவாரி இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் ஜனநாயகரீதியிலான தேர்தல்களில் 400
கோடி மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். வழக்கமாக இந்தத் தேர்தல் திருவிழா
ஜனநாயகத...
2 weeks ago
No comments:
Post a Comment