Monday, August 16, 2010

மரபுக் கவிதை - 104




அறிஞரை அறிதல்



புரிதல், புரிந்தது போல் நடித்தல், பிற்பாடு
தெரிதல், தெரியாததையும் தெரிந்தது போல்
திரிதல், திரிந்தபடி அறிதல், அறியாத தெனினும்
சொரிதல் அறிஞர் தொழில்.
.

Sunday, August 15, 2010

சிந்தனைக்கு


சான்றோர் அமுதம்

எந்த நாட்டின் இளைஞர்கள் மனதில்
இறந்தகாலம் குறித்த பெருமிதம்,
நிகழ்காலம் குறித்த விசனம்,
எதிர்காலம் குறித்த பொற்கனவுகள்
நிறைந்துள்ளதோ,
அந்த நாடுதான் உயிர்ப்புடன் திகழும்.
-மகரிஷி அரவிந்தர்
(இன்று நாட்டின் 64-வது சுதந்திர தினம்; அரவிந்தர் நினைவுதினம்)
..

Saturday, August 14, 2010

வசன கவிதை - 73



உண்மையாய் வா!


பெருமைக்காக
காஷ்மீரில் ஊடுருவும்
சகோதரனே
பிரிவினையின் வேதனையை
உணர்ந்து பார்.

அமைதிக்காக
புறாக்களைப் பறக்கவிடும்
அன்பார்ந்த தன்மையை
அலட்சியப்படுத்தாதே,
அண்டைவீட்டானே!
'போக்ரான்' சக்திஸ்தலமும்
எங்களது தான்.

ஒற்றுமைக்காக
சமரசத்தை விழையும்
சகிப்புத்தன்மையை
சாதாரணமாய் நினைக்காதே!
சிறிது சிந்தி-
டிச. 6ஐ.

நட்புக்காக ஆரத்தழுவும்
பரந்த மனப்பான்மையை
பாழாக்க முயலாதே!
எம் கரங்களில்
'கார்கில்' நகங்களும் உண்டு.

ஏ, சகோதரனே!
வட்டமிடும் வல்லூறு
வல்லரசுகளுக்கு மத்தியில்
வண்ணமாய் மிளிரும்
பாரதத்தைப் பார்!
இனியேனும் உன்
பொறாமை அழுக்குகள்
பொசுங்கிப் போகட்டும்!

உலகுக்காக
ஒப்பந்தம் செய்வதால்
ஒரு பயனுமில்லை,
உண்மையாய் வா
சகோதரா!
உருக்கென இணைவோம்!
உவப்பாய் வாழ்வோம்!


நன்றி: விஜயபாரதம்
ó

Friday, August 13, 2010

சிந்தனைக்கு



குறள் அமுதம்



ஈதல் இசைபட வாழ்தல்; அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
-திருவள்ளுவர்
(புகழ்-231)
.

Thursday, August 12, 2010

உருவக கவிதை - 57






ஊசல்


புரிபடாத படிமத்திற்கும்
மலினமான மடக்கு வரிகளுக்கும்
இடையே ஊசலாடுகிறது
கவிதை.

புரிபடாத உருவகத்தைக் கொண்டாடும்
அறிவுலகத்துக்கும்,
எழுதுவதெல்லாம் கவியென்ற
எளியவர்களுக்கும்
இடையே ஊசலாடுகிறது
கவிதை.


இரண்டும் வேண்டாம் என்ற
தனிப்பாட்டை
எனது.

காலத்தை வெல்வது தான் கவிதை.
காலம் பதில் சொல்லும்.
.

Wednesday, August 11, 2010

சிந்தனைக்கு


குறள் அமுதம்

வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
-திருவள்ளுவர்
(ஈகை-221)
.

Tuesday, August 10, 2010

எண்ணங்கள்


படிக்க வேண்டிய கட்டுரை

தமிழ் ஹிந்து - இணையதளத்தில் வெளியாகியுள்ள திரு. சேக்கிழான் எழுதியுள்ள கட்டுரை: ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல் - எனது வலைப்பூ நண்பர்களுக்காக.

.

Monday, August 9, 2010

சிந்தனைக்கு


குறள் அமுதம்


தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
-திருவள்ளுவர்
(ஒப்புரவு அறிதல் -212)
.