Friday, September 10, 2010

மரபுக் கவிதை - 107


விநாயக சதுர்த்தி




சங்கரன் மைந்தன்
சதுர்கரத்தானை
சதுர்த்தியில் வணங்க
சங்கடம் தொலையும்.

அகத்தியருக்கு
அருளொளி தந்த
அற்புத தெய்வம்
அபயம் தருவார்.

கணபதிசாமி
கழல்களைப் பற்ற
கவலைகள் தீரும்
களிப்புருவாகும்.

தேசிய ஒற்றுமைத்
தேவை உணர்ந்து
தேடிய திலகர்
தேவனைச் சொன்னார்.

தேவர்கள் போற்றும்
தேவியின் புதல்வன்
தேசம் காத்திட
தேர்களில் பவனி.

தெருக்களிலெல்லாம்
தெய்விகக் காட்சி
தெம்பினை வழங்கும்
தெளிவுறு சாட்சி.

பற்பல சதி
பலவித மொழிகள்
பரவிய நாட்டில்
பரவச ஒருமை.

இந்திய நாட்டை
இந்து மதத்தை
இந்துவின் குமரன்
இனிதுறக் காப்பான்.

ஆனைமுகத்தான்
ஆதரவுண்டு
ஆவணி சதுர்த்தி
ஆசிகளுண்டு.
குறிப்பு: நாளை ஸ்ரீ விநாயக சதுர்த்தி
நன்றி: விஜயபாரதம் (20.09.1996)
.

No comments:

Post a Comment