Wednesday, July 27, 2011

புதுக்கவிதை - 143


பரிதாப ஜீவன்கள்




சாலையின் இருபுறமும்

புழுதியையும் கரியையும்

ஜீரணித்தபடி நிற்கின்றன

நிழல் மரங்கள்-

கசாப்புக் கடையில் தவிக்கும்

ஆடுகள் போல.



கடந்துபோகும் வேக வாகனங்கள்

எப்போதும் ஏற்படுத்தும்

அதிர்வுகளைத் தாங்கியபடி,

மோதுமோ மோதாதோ என்ற

பதைபதைப்புடன்

காட்சி அளிக்கும் பரிதாப மரங்கள்.



சாலை விரிவாக்கத்துக்காக

அளக்கும் கருவிகளுடன் நிற்கும்

ஊழியர்களுக்கும்

அதே மரம் நிழல் தருகிறது-

எல்லைக் கோட்டுக்குள்

தான் வருவது தெரியாமல்.



அதுசரி.

தெரிந்துதான்

என்ன ஆகப் போகிறது?

தன்னை அறுக்கும் ரம்பத்தை

மௌனமாக வேடிக்கை பார்ப்பதைத் தவிர?

.

1 comment:

வ.மு.முரளி. said...

பாராட்டுக்கு நன்றி!

Post a Comment